30 நாட்களுக்கு சீனா-சிங்கப்பூர் இடையே விசா தேவையில்லை

January 27, 2024

சீனா - சிங்கப்பூர் இடையே இனி விசா தேவையில்லை என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சீனா மற்றும் சிங்கப்பூர் இடையே முப்பது நாட்களுக்கு விசா தேவை இல்லை என்று இருநாட்டு அதிகாரிகள் கூறினர். இந்த புதிய விதிகள் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. சீனர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக நீண்ட காலமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது […]

சீனா - சிங்கப்பூர் இடையே இனி விசா தேவையில்லை என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சீனா மற்றும் சிங்கப்பூர் இடையே முப்பது நாட்களுக்கு விசா தேவை இல்லை என்று இருநாட்டு அதிகாரிகள் கூறினர். இந்த புதிய விதிகள் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த இரு நாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக நீண்ட காலமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது தங்களுடைய விசா நடைமுறையில் இரு நாடுகளும் மாற்றங்கள் கொண்டு வருகின்றனர். இதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளனர். சீனா - சிங்கப்பூர் இடையே செல்வதற்கு இனி விசா தேவை இல்லை. சிங்கப்பூர் மற்றும் சீன மக்கள் தங்களுடைய பாஸ்போர்ட் மூலம் பரஸ்பர நாடுகளில் 30 நாட்கள் வரை தங்கி கொள்ளலாம். இது அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் இரு நாடுகளிடையே உறவுகள் மேம்படும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu