முதல் முறையாக லாபத்தை பதிவு செய்த விஸ்தாரா ஏர்லைன்ஸ்

January 24, 2023

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் முதல் முறையாக லாபம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், லாபம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள நிறுவனம், அதன் தொகை குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் EBITDA நல்ல நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் சார்பாக தற்போது 52 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், 5000 க்கும் […]

விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் முதல் முறையாக லாபம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், லாபம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள நிறுவனம், அதன் தொகை குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் EBITDA நல்ல நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் சார்பாக தற்போது 52 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், 5000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், ஒரு மாதத்திற்கு 8500 க்கும் மேற்பட்ட விமான பயணங்களை மேற்கொள்கிறது. உள்நாட்டு விமானச் சந்தையில் 9.2% விஸ்தாரா ஏர்லைன்ஸ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் கண்ணன் இது குறித்து கூறுகையில், "விஸ்தாரா அடைந்துள்ள உயரங்கள் குறித்து பெருமையாக உள்ளது. தொடர்ந்து, நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று நம்புகிறோம்" என கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu