விவேக் ராமசாமி கடந்த 20ஆம் தேதி DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், "செயல் திறன் துறை" (DOGE) உருவாக்கப்பட்டது. இதனை தொழிலதிபர் விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் இணைந்து கவனிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், 39 வயதான விவேக் ராமசாமி கடந்த 20ஆம் தேதி DOGE பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் தனது எக்ஸ் பதிவில், "DOGE உருவாக்கத்தில் உதவிய வாய்ப்புக்கு நன்றி. எலான் மற்றும் அவரது குழு வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும், ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால், அவர் DOGE பதவியை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.