ரஷ்ய அதிபர் புதின், பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “உக்ரைன் போருக்காக எங்கள் நாட்டின் அணு ஆயுதங்களை பெலாரஸ் நாட்டில் நிலை நிறுத்த உள்ளோம். இது உலக வரலாற்றுக்கு புதிது அல்ல. ஏற்கனவே, நட்பு நாடுகளில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. மேலும் ,இது அணு ஆயுதப் பரவல் தடைக்கான வாக்குறுதிகளை மீறும் வகையில் இருக்காது” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பரபரப்பான அறிவிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
புதினின் இந்த பேச்சு, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை போல அமைந்துள்ளது. அதே வேளையில், ரஷ்யா, அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. மேலும், சீன அதிபரின் ரஷ்ய பயணத்திற்கு பின்னர், புதின் இவ்வாறு பேசியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.