ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைனின் குர்ஸ்க் பகுதியில் 24 மணிநேரத்தில் ஆயுத படையின் 280 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பீரங்கி, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 3 கார்கள், மின்னணு போர் நிலையம் மற்றும் 2 பீரங்கி ஏவுகணைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, குர்ஸ்க் பகுதியில் உக்ரைனுக்கு 37,935 வீரர்கள் மற்றும் 229 பீரங்கிகள் இழப்பாகியுள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.