ஆடை வடிவமைப்பு, கட்டுமானத்துறை என கிராம இளைஞர்களுக்கு 120 பிரிவுகளில் தொழில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்துடன், ஊரக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்குவதற்கான DDUGKY திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 32 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப்படும். மேலும், சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, கட்டுமானத்துறை, ஆட்டோமோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், அழகுக்கலை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 120க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.