வோடபோன் ஐடியா நிறுவனம் தனது நிறுவனத்தின் பங்குகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,980 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனத்தின் பங்குகள் செவ்வாயன்று 2.3% உயர்ந்தது.
இந்த நிதியை வோடபோன் குழுமத்தின் இரண்டு துணை நிறுவனங்களான ஒமேகா டெலிகாம் ஹோல்டிங்ஸ் மற்றும் உஷா மார்ட்டின் டெலிமேடிக்ஸ் ஆகியவை முதலீடு செய்ய உள்ளன. இதற்கு முன்னர், வோடபோன் பிஎல்சி நிறுவனம் இண்டஸ் டவர்ஸில் இருந்து வெளியேறியதன் மூலம் ரூ.2,801.7 கோடி நிதியை திரட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியை கொண்டு நிறுவனத்தின் கடன்களை தீர்க்கவும், வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு ஆதரவளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.