இன்றைய வர்த்தகத்தில், வோடபோன் நிறுவனப் பங்குகள் ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளன. இன்று, 10% வரையில் வோடபோன் ஐடியா பங்குகள் உயர்ந்துள்ளன. தேசிய பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா பங்கு விலை கிட்டத்தட்ட 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக்கான கட்டணத்தில் 50% தொகையை செலுத்தியுள்ளது. அது போக, மார்ச் காலாண்டுக்கான உரிமைத் தொகையை செலுத்தி உள்ளது. மேலும், ஜூன் காலாண்டுக்கான 90% தொகையும் வட்டியுடன் விரைவில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தி வெளியான பின்னர், வோடபோன் ஐடியா பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. இன்றைய நிலையில் உள்ள வோடபோன் பங்குகளை கடந்த மாத பங்குகளுடன் ஒப்பிட்டால், 40% உயர்வு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வோடபோன் பங்குகள் கடந்த 52 வாரங்களின் உயர்ந்தபட்ச விலையை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.