வோடபோன் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக மார்க்கரெக்டா டெல்லா வாலி உள்ளார். அவர், தற்போது, அடுத்த 3 ஆண்டுகளில், புதிதாக 11000 பேரை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "எங்கள் நிறுவனத்தின் செயல் திறன் திருப்திகரமாக இல்லை. அதனை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். குறிப்பாக, நிறுவனத்தின் 10% சர்வதேச ஊழியர்களை நீக்க உள்ளோம். இதன் மூலம், நிறுவனம் கட்டமைப்பு எளிமையாக்கப்படும். பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்" என்று கூறியுள்ளார். இவர், வோடபோன் நிறுவனத்தின் இடைக்கால தலைமை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்பத்தை விரிவாக்கும் நடவடிக்கையில் வோடபோன் நிறுவனம் முனைப்புடன் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.