மரங்களால் எரிமலை வெடிப்பை கணிக்க முடியும் - புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

December 28, 2023

எரிமலை வெடிப்பு நிகழப்போவதை மரங்களால் முன்கூட்டியே அறிய முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பச்சைக் காடுகள், எரிமலை வெடிப்புகள் குறித்த முன்னறிவிப்புகளை தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, செயற்கைக்கோள் படங்களில் பச்சை காடுகளில் இருந்து கிடைக்கும் சமிக்கைகள் தெளிவாகத் தெரிவதாக கூறியுள்ளனர். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், 1984 முதல் 2022 வரை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தனர். அதில், பொதுவாக காடுகளில் உள்ள மரங்களின் பச்சை நிறம், படிப்படியாக பழுப்பு நிறமாக மாறி, எரிமலை வெடிப்பு […]

எரிமலை வெடிப்பு நிகழப்போவதை மரங்களால் முன்கூட்டியே அறிய முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பச்சைக் காடுகள், எரிமலை வெடிப்புகள் குறித்த முன்னறிவிப்புகளை தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, செயற்கைக்கோள் படங்களில் பச்சை காடுகளில் இருந்து கிடைக்கும் சமிக்கைகள் தெளிவாகத் தெரிவதாக கூறியுள்ளனர். அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், 1984 முதல் 2022 வரை எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்தனர். அதில், பொதுவாக காடுகளில் உள்ள மரங்களின் பச்சை நிறம், படிப்படியாக பழுப்பு நிறமாக மாறி, எரிமலை வெடிப்பு நெருங்கும் போது முழுமையாக மாற்றமடைந்து காணப்படுவதாக கண்டுபிடித்துள்ளனர். எனவே, எரிமலை வெடிப்பு குறித்த முன் அறிவிப்புகளை மரங்கள் தெரிவிப்பதாக ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆய்வில், பிலிப்பைன்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் போது, அருகில் இருந்த காடுகளில் தென்பட்ட மாற்றங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu