ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் நேற்று முன்தினம் இரவு எரிமலை வெடித்தது.
ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் நேற்று முன்தினம் இரவு எரிமலை வெடித்தது.
இது மிகவும் ஆக்ரோஷத்துடன் வெடித்தது. தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது. இது கடந்த ஒரு வார காலமாகவே குமுறிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த எரிமலை கிரன்டாவிக் நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிரன்டாவிக் பகுதியில் வசிக்கும் சுமார் 4000 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்புக்கு முன்பாக கூட நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த வெடிப்பில் யாரும் காயம் அடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.