ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல வாகன நிறுவனமான வோல்க்ஸ்வாகன், இந்தியாவில் வாகன விற்பனை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில், வோல்க்ஸ்வாகனின் இந்திய விற்பனை 85.48% உயர்ந்து, 101270 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, கடந்த 2021 ஆம் ஆண்டில், 54598 வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய வோல்க்ஸ்வாகன் குழுமத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக அதிகாரி பியூஷ் ஆரோரா, “உலகளாவிய முறையில் நிலவிய, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, செமி கண்டக்டர் பற்றாக்குறை போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், நாங்கள் வெற்றிகரமாக விற்பனை வளர்ச்சியை எட்டியுள்ளோம்” என்று கூறியுள்ளார். வோல்க்ஸ்வாகன் குழுமத்தின் சார்பில், ஸ்கோடா, வோல்க்ஸ்வேகன், ஆடி, போர்ஸ், லம்போர்கினி ஆகிய கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.