தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதற்கு வாக்காளர்களுக்கு அடையாள அட்டை இல்லாவிட்டால் 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்கள் விவரம் பின்வருமாறு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அடையாள அட்டை
புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
மத்திய,மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை
மேற்கூறிய 12 ஆவணங்களை காண்பித்து வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.