தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கி உள்ளது. இதற்கான வரைவு பட்டியல் 27ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அன்றிலிருந்து வாக்காளர் பெயர்கள் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் வாக்குச்சாவடி அலுவலர்களிடமும், தேர்தல் துறை இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15187 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பெயர் நீக்கம் செய்வதற்காக 1917 படிவங்களும், முகவரி மாற்றத்திற்காக 1936 படிவங்களும் பெறப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பொதுமக்களால் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 31 அமைவிடங்களில் உள்ள 68,000 வாக்குச்சாவடிகளில் 10 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.