ஊடக அதிபர் ஜிம்மி லாயின் போன்களை சோதணை செய்வதற்காக தேசிய பாதுகாப்பு போலீசாருக்கு ஹாங்காங் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் தேசிய பாதுகாப்பு வழக்கு ஒன்றில் பெய்ஜிங்கால் விதிக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், லாய் மற்றும் முன்னாள் ஆப்பிள் ஊழியர்கள் 6 பேர் வெளிநாட்டுப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அதனால் ஆகஸ்ட் 2020 இல் லாய் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவருடைய தொலைபேசிகளில் குற்றத்திற்கான ஆதாரங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவரது தொலைபேசியை சோதனை செய்ய முதன்மை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்த முடிவை எதிர்த்து லாயின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ததால், லாயின் தொலைபேசிகள் சீல் வைக்கப்படலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை, நீதிபதிகள் எஸ்தர் டோ, சுசானா டி அல்மடா ரெமிடியோஸ் மற்றும் அலெக்ஸ் லீ ஆகியோர் முன்னிலையில் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.