மீண்டும் பணிக்கு வருகிறது போர்க் கப்பல் விக்ரமாதித்யா

February 20, 2023

போர்க் கப்பல் விக்ரமாதித்யா மீண்டும் பணிக்கு வருகிறது. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்தியா வசம் உள்ளன. 2021 டிசம்பரில் முழுமையான பழுது பார்ப்புக்காக, கர்நாடக மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு விக்ரமாதித்யா போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 15 மாதங்களாக அக்கப்பலில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போர்க் கப்பல் மார்ச் முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. கடல் […]

போர்க் கப்பல் விக்ரமாதித்யா மீண்டும் பணிக்கு வருகிறது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்தியா வசம் உள்ளன. 2021 டிசம்பரில் முழுமையான பழுது பார்ப்புக்காக, கர்நாடக மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு விக்ரமாதித்யா போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 15 மாதங்களாக அக்கப்பலில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போர்க் கப்பல் மார்ச் முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.

கடல் பரிசோதனை முடிந்த பிறகு மார்ச் 31 அன்று இந்தக் கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் சீனா பிரச்சினையில் ஈடுபட்டு வருகிற நிலையில், விக்ரமாதித்யா போர்க் கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவது இந்திய ராணுவத்தின் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu