நாடு முழுவதும் 259 இடங்களில் போர் நிலை ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா அதற்குத் தீர்வாக பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 259 இடங்களில் போர் நிலை ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய, தமிழகத்தின் சென்னை துறைமுகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையின் போது, சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆயுதங்களுடன் அணிவகுப்பில் ஈடுபட்டனர். கல்பாக்கம் பகுதியில் தாக்குதல் ஏற்பட்டால் எப்படி கையாளலாம் என்பது குறித்தும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் பேரிடர் மேலாண்மை குழுவினர் இதில் பங்கேற்றனர். மேலும், புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையில் போர் சூழ்நிலைக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.