கோடைகாலம் தொடங்கிய நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு 9 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்துள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 5 ஏரிகளிலும் சேர்த்து மட்டும் 8.569 தண்ணீர் இருப்பு உள்ளது. நீர் இருப்பு 9 டி.எம்.சி. கீழ் குறைந்துவிட்டது. எனினும் ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீரை வைத்து இன்னும் 8 மாதத்துக்கு சென்னையில் சப்ளை செய்ய முடியும். எனவே இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.