ஜல் ஜீவன் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில குடிநீர் இணைப்பு - திண்டுக்கல்

October 5, 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 25 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 25 கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு தரும் பணிகள் நடைபெற்று 100 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், பழனி ஒன்றியம், குஜிலியம்பாறை ஒன்றியம், நத்தம் ஒன்றியம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், உள்ளிட்ட 25 ஒன்றியங்களில் 100 […]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 25 கிராம ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 25 கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு தரும் பணிகள் நடைபெற்று 100 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், பழனி ஒன்றியம், குஜிலியம்பாறை ஒன்றியம், நத்தம் ஒன்றியம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், உள்ளிட்ட 25 ஒன்றியங்களில் 100 சதவீத பணிகளை முடித்து அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் முகமை திட்ட இயக்குனர், மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும் உள்ள 4.75 லட்சம் வீடுகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu