கடந்த சில நாட்களாக தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர் வரத்து 1200 கன அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று முன் தினம், ஒகேனக்கல் அளவீட்டின்படி நீர்வரத்து 900 கன அடியாக பதிவாகி இருந்தது. இது, நேற்று மாலையில் 1200 கன அடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் பதிவான 21 கன அடி நீர்வரத்து, நேற்று 33 கன அடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 51.22 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 51 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 18.44 டிஎம்சி ஆக சொல்லப்பட்டுள்ளது.














