சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நெம்மெலியில் அமைந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குடிநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 15ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 16ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை மண்டலம் 11,12, 13, 14 மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுதூர், ராதா நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் நந்தம்பாக்கம், வளசரம்பாக்கம், நொளம்பூர், ராமபுரம்,ஆலந்தூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய இடங்களிலும் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள https:cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.