பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றுவது உள்ளிட்ட இதரகட்டண வரிகளை அக்டோபர் மாதம் முதல் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்திற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றுவரி, குடிநீர் கட்டணம், இணைப்பு கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை இனி இ சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல் காசோலை, டிடி ஆகியவை மட்டுமே பயன்படுத்தி செலுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுm அனைத்து பகுதிகளிலும் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். பணிமனை அலுவலகங்களில் செயல்பட்டு வரும் மையங்கள் ஒன்றாம் தேதி முதல் செயல்படாது. மக்களின் வசதிக்காக அனைத்து பகுதிகளிலும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, டிடி பெறுவதற்காக பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங், யூபிஐ, கியூஆர் கோடு மூலமாகவும் பணம் செலுத்தலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.