பேரிடர் காலங்களில் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பேரிடர்களை தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் இன்னும் சில ஆண்டுகளில் 40 நாடுகள் இணைய உள்ளன. இந்த மாநாடு, வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள், சிறிய மற்றும் பெரிய நாடுகள், வட மற்றும் தென் துருவங்கள் ஒரே தளத்தில் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர் காலங்களில், யாரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். போக்குவரத்து உள்கட்டமைப்பில், சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு முக்கியமானது என்று அவர் பேசினார்.