உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது படைகள் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யாவிற்கு "ஒரு சென்டிமீட்டர் கூட" கொடுக்காது என்று கூறினார்.
டொனெட்ஸ்கின் தொழில்துறை பிராந்தியத்தில் உள்ள பாக்முட், சோலேடார் மற்றும் அவ்திவ்கா நகரங்களைச் சுற்றி ரஷ்ய படைகளுக்கும் உக்ரைன் வீரர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து ஸிழேன்ச்கய் கூறுகையில், ரஷ்யா வீரர்கள் கடு தாக்குதல் நடத்துகின்றனர். நாங்களும் பதிலுக்கு கடுமையாக சண்டையிடுகிறோம். அவர்கள் தினமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.இருப்பினும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் நிர்வாக எல்லையில் முன்னேற வேண்டும் என்று தீவிரமாக செயல்படுகின்றனர். எங்கள் நிலத்தில் ஒரு சென்டிமீட்டர் கூட கொடுக்க மாட்டோம் என்றார்.
Mykolaiv பிராந்தியத்தின் உக்ரேனிய ஆளுநரான Vitaly Kim, உக்ரேனியப் படைகள் ஏற்கனவே அப்பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்றிவிட்டதாகக் கூறினார். செப்டம்பர் மாதம் ரஷ்யாவுடன் இணைந்ததாகக் கூறப்படும் நான்கு பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.