நாகர்கோவில் தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.
செப்டம்பர் 17,24 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயிலாக ( வண்டி எண் 06012) நாகர்கோவில் தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இவை நாகர்கோவிலில் இருந்து நான் ஞாயிற்றுக்கிழமை மாலை 4. 35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இதேபோல் மறு மார்க்கமாக தாம்பரம் நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06011) தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8:55க்கு நாகர்கோவில் சென்றடையும். இது செப்டம்பர் 18,25 தேதிகளில் இயக்கப்பட உள்ளன. இவற்றின் முன்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியுள்ளது.