கேரளத்தில் நல ஓய்வூதிய மோசடியில் ஈடுபட்டதற்காக 38 அரசு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில், பல்வேறு திட்டங்களில் மக்களுக்கு மாநில அரசு சார்பில் நல ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 1,458 அரசு ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக சமீபத்தில் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்து 400 பணத்தை மோசடி செய்துள்ளனர். இந்த ஊழியர்கள், 34 பேர் வருவாய்த்துறையில் மற்றும் 4 பேர் சர்வே மற்றும் நில ஆவண துறையில் பணிபுரிந்தனர். கேரள அரசு, அவர்களிடமிருந்து மோசடி பணத்தை 18 சதவீத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதற்கான துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஊழியர்களுக்கு உரிய தண்டனைகள் விதிக்கப்படுவதாகவும், அவர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.














