மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் - 600க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 4 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் […]

மேற்கு வங்கத்தில் 4 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூலை 8-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு பல்வேறு பகுதிகளிலும் மோதலும், வன்முறைகளும் ஏற்பட்டன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் 3 அடுக்கு உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. முர்ஷிதாபாத், கூச் பெகர், வடக்கு தினாஜ்பூர் தெற்கு 24 பர்கான்ஸ், நாடியா ஆகிய மாவட்டங்களில் உச்சக்கட்ட வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் வாக்கு சாவடிகள் சூறையாடப்பட்டது. வாக்கு பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. கூச்பெஹரின் தீன்ஹகா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு சாவடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பிர்புரம் பகுதியில் உள்ள வாக்குசாவடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில், வன்முறை எதிரொலியால் மேற்கு வங்கத்தில் 4 மாவட்டங்களில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, புருலியா, பிர்பும், ஜல்பாய்குரி, சவுத் 24 பர்கானா ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 600 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu