உக்ரைனில் உள்ள மேற்கத்திய படைகளை தாக்குவோம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மேற்கத்திய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வந்தால் அவர்களை தாக்குவதற்கான சட்டபூர்வ உரிமை ரஷ்யாவுக்கு உள்ளது என்ற அந்த நாடு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறி இருப்பதாவது, உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மேற்கத்திய படைகள் அந்த நாட்டுக்கு வந்தால் அவர்கள் குறி வைக்கப்படுவது தவிர்க்க இயலாத ஒன்று. அவர்கள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ராணுவ அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் இலக்குகள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக உக்ரைன் ராணுவ தலைமை தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி கூறுகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் உக்ரைன் வந்து வீரர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்று கடந்த வாரம் கூறி இருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ரஷ்ய செய்தி தொடர்பாளர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.