இந்தியாவில், கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், 37 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விட 2 லட்சம் கூடுதலாகும். இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதி 4 (1) (d) மற்றும் 2021ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட டிஜிட்டல் மீடியாவுக்கான கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் படி இந்த கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்பில் பல ஸ்பேம் கணக்குகள் செயல்படுகின்றன. அவற்றை கண்டறிய பயனாளர்களின் ‘பிளாக்’ மற்றும் ‘ரிப்போர்ட்’ செய்யப்பட்ட கணக்குகள் விவரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், இவ்வாறான ஸ்பேம் கணக்குகள் தடை செய்யப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையிலான சமூக ஊடகச் சேவையை வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.