கடந்த டிசம்பர் மாதத்தில் 36.77 லட்சம் இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளை விட சற்று குறைவாகும். மேலும், தடை செய்யப்பட்ட கணக்குகளில் 1389000 கணக்குகள், பயனர்களிடமிருந்து புகார்கள் வருவதற்கு முன்னரே தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, டிசம்பர் மாதத்தில் பயனர்களிடம் இருந்து 1607 முறையீடுகள் வந்ததாகவும், இது நவம்பர் மாதத்தை விட 70% கூடுதலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த 1607 புகார்களில், 91% அதாவது, 1459 புகார்கள் கணக்குகளை பிளாக் செய்வது குறித்ததாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொடர்பு விதிமுறைகளின் படி, ஒவ்வொரு தளமும், மாதாந்திர அறிக்கைகள், பெறப்பட்ட புகார்கள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில், வாட்ஸ்அப் நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.