கடந்த 10- ஆம் தேதி காற்றாலை அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.
தமிழகத்தில் அனல் மின்சார உற்பத்தி,அணு மின்சார உற்பத்தி, நீர் மற்றும் கேஸ் மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சார நுகர்வோர்களுக்கு மின்சாரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இது தவிர காற்றாலை மின்சாரம் மற்றும் சோலார் தளங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் தற்போது காற்றாலை மின்சார உற்பத்தி உச்ச நிலையில் இருக்கிறது.
தற்போது கடந்த 10 ஆம் தேதி மாலை 6:40 மணியளவில் அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளன. தொடர்ந்து நேற்று அதிகாலை 3 ஆயிரத்து 794 மெகாவாட், காலை 7.50 மணிக்கு 4314 மெகாவாட் என காற்றாலைகள் உற்பத்தி செய்து தருகிறது. மேலும் சோலார் மூலம் கடந்த பத்தாம் தேதி 4672 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக சோலார் மற்றும் காற்றாலைகள் மூலம் 10,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.