மைக்ரோசாப்ட் நிறுவனம் கம்ப்யூட்டர் விசைப்பலகையில் புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக விசைப்பலகையில் எந்த ஒரு புதிய வசதியை ஏற்படுத்தாத மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து மடிக்கணினி மற்றும் கணினி தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய பட்டனை அறிமுகப்படுத்த ஒப்பு கொண்டுள்ளனர். இந்த புதிய பட்டன் மைக்ரோசாப்ட் -ன் புதிய செய்தி தொழில்நுட்பமான கோபைலட்-ஐ பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்பட செய்ய முடியும். இணைய வழி சேவைகள் மட்டுமில்லாமல் உள் பயன்பாட்டிற்கு பயன்படும். முப்பது வருடங்களுக்கு முன் விண்டோஸ் பட்டனை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் பின்பு இந்த வசதியை இப்போதுதான் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து மைக்ரோசாப்ட் நிர்வாக துணை தலைவர் மற்றும் நுகர்வோர் தலைமை அதிகாரியான யூசுப் மெகடி கூறுகையில் செய்யறிவு தொழில்நுட்ப உலகின் நுழைவு வாயிலாக கோ பைலட் பட்டன் இருக்கும் என்று கூறியுள்ளார்.