பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அதன் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு, அதன் பங்குதாரர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். மேலும், நிறுவனத்தின் பங்கு ஒவ்வொன்றையும் 445 ரூபாய்க்கு திரும்பப் பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 26.96 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இந்த தொகைக்கு திரும்ப பெறப்பட உள்ளன.
விப்ரோ நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுவது குறித்து அஞ்சல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு நடத்தியது. இதில் பங்கேற்ற நிறுவனத்தின் பங்குதாரர்கள், 26.96 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப பெற ஒப்புதல் வழங்கியுள்ளனர். அதன்படி, மொத்த பங்குகளில் 4.91% பங்குகள், 12000 கோடி ரூபாய்க்கு மிகுதியாகச் செல்லாமல், திரும்ப பெறப்பட உள்ளன. விப்ரோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அதன் சந்தை மதிப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.