இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் வரிக்குப் பின்னான லாபம் 5% உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக நாளில் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 2.5% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் 5.21% உயர்ந்து 2834.6 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விப்ரோ நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 22208.3 கோடியாக உயர்ந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் நிறுவனத்தின் நிகர லாபம் 7.8% வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், விப்ரோவின் வருவாய் 4.23% சரிவடைந்துள்ளது. ஆனாலும், காலாண்டு அடிப்படையில் முன்னேற்றம் காணப்படுவதால் பங்குகள் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.