ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த 300 ஊழியர்களை விப்ரோ நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ அதன் ஊழியர்கள் 300 பேர் ஒரே நேரத்தில் அதன் போட்டி நிறுவனத்திற்கும் வேலை செய்வதை கண்டறிந்துள்ளது. அதனால் அந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இது குறித்துக் ௯றிய விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி , விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், எங்கள் போட்டி நிறுவனத்திற்கும் வேலை செய்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அதையடுத்து நடந்த சோதனையில், கடந்த சில மாதங்களில் போட்டி நிறுவனத்திற்கும் வேலை செய்யும் 300 ஊழியர்களை கண்டுபிடித்தோம். அதன் விளைவாக அந்த 300 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளோம் என்றார். மேலும் விப்ரோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல்வேறு ஐடி ஊழியர்கள் தங்கள் வேலை குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.