விப்ரோ நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.3,209 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.3% உயர்வாகும். இந்த நல்ல செய்தியைத் தொடர்ந்து, விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்ந்து ரூ.550.55 ஆக வர்த்தகமாகின்றன.
விப்ரோ நிறுவனத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 8% அதிகரித்துள்ளது. இருப்பினும், வருகிற காலாண்டில் பருவகால காரணங்களால் வருவாயில் 2% முதல் 0% வரை சரிவு ஏற்படலாம் என்று கணிக்கப்படுகிறது. மேலும், விப்ரோ நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போனஸ் பங்குகளுக்கான பதிவு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், முதலீட்டு நிறுவனங்களான நோமுரா, Jefferies, CITI மற்றும் மோதிலால் ஓஸ்வால் ஆகியவை விப்ரோ நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து வெவ்வேறு கணிப்புகளை வெளியிட்டு, வெவ்வேறு இலக்கு விலைகளை நிர்ணயித்துள்ளன.