கடந்த செப்டம்பர் 21ம் தேதி, விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜட்டின் தலால் திடீரென பதவி விலகினார். அபர்ணா ஐயர், விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக உடனடியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜட்டின் தலால் காக்னிசன்ட் நிறுவனத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பில் அவர் இணையலாம் என கூறப்படுகிறது.ஜட்டின் தலால், கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 2015 முதல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் உள்ளார். அவரது திடீர் பதவி விலகல், விப்ரோ நிறுவனத்துக்கு இழப்பாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் காக்னிசன்ட் நிறுவனத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனினும், நிறுவனத்தின் தரப்பிலிருந்து இது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.