விப்ரோவின் குறைந்த சம்பள திட்டம் - 90% புதிய பணியாளர்கள் ஒப்புதல்

உலகளாவிய முறையில், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பணி அமர்வுகளை தாமதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், புதிதாக நிறுவனத்தில் சேர இருக்கும் ஊழியர்களுக்கு, குறைவான சம்பளம் வழங்க விப்ரோ முன்மொழிவு திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்த திட்டத்திற்கு, 90% க்கும் அதிகமான புதிய பணியாளர்கள் ஆதரவு தெரிவித்து, ஒப்புதல் அளித்துள்ளனர். விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜட்டின் டலால் இது குறித்து கூறுகையில், “கடந்த பிப்ரவரி மாதத்தில், ஆண்டுக்கு 6.5 லட்சம் சம்பளத்திற்கு […]

உலகளாவிய முறையில், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பணி அமர்வுகளை தாமதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், புதிதாக நிறுவனத்தில் சேர இருக்கும் ஊழியர்களுக்கு, குறைவான சம்பளம் வழங்க விப்ரோ முன்மொழிவு திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்த திட்டத்திற்கு, 90% க்கும் அதிகமான புதிய பணியாளர்கள் ஆதரவு தெரிவித்து, ஒப்புதல் அளித்துள்ளனர்.

விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஜட்டின் டலால் இது குறித்து கூறுகையில், “கடந்த பிப்ரவரி மாதத்தில், ஆண்டுக்கு 6.5 லட்சம் சம்பளத்திற்கு பதிலாக, ஆண்டுக்கு 3.5 லட்சம் மட்டுமே சம்பளம் கொடுத்தால், பணியில் சேர விருப்பமா? என விப்ரோ கேட்டிருந்தது. இதற்கு, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியில் சேர இருந்த 92% பேர், பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார். மேலும், இதுவரை தாமதிக்கப்பட்டு வந்த பணி அமர்வுகள், குறைவான சம்பளத்துடன் கூடிய வகையில் விரைவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu