ஐபிஓவுக்கு பிறகு டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் இன்று முதல் முறையாக பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், 140% லாபத்துடன் டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் வெளியாகின. கடந்த 2 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்ட ஐபிஓ பங்குகளில், டாடா டெக்னாலஜிஸ் உச்சபட்ச உயர்வுடன் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பல்வேறு கணிப்புகளை விடவும் அதிக லாபத்துடன் டாடா டெக்னாலஜிஸ் வெளியாகி உள்ளது. தொடக்கத்தில் 140% ஆக இருந்த லாபம், இன்றைய வர்த்தக நேர முடிவில் 165% ஆக உயர்ந்துள்ளது. ஐபிஓ விலையை விட 3 மடங்கு உயர்வுடன் டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் உள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் 50% லாபத்தை எடுத்துக்கொண்டு, மீதமுள்ளதை நீண்ட கால முதலீடாக வைத்துக்கொள்ள பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.