3 ஆண்டுகளுக்குள் ஆன்டிகுவா பார்புடா தீவு குடியரசாக மாற வாக்கெடுப்பு

September 12, 2022

சார்லஸ் மன்னராக பதவியேற்ற பிறகு, தீவு நாடு குடியரசுக்காக வாக்கெடுப்பை நடத்த உள்ளது ஆன்டிகுவாவும் பார்புடாவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குடியரசாக மாறுவதற்கு வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கேஸ்டான் பிரௌனி தெரிவித்துள்ளார். 1981 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரமடைந்த தீவு நாடு, இங்கிலாந்து மன்னரைத் தங்கள் அரச தலைவராகப் ஏற்றுக்கொள்ளும் 14 காமன்வெல்த் உறுப்பினர்களில் ஒன்றாகும். இது குறித்து பேசிய பிரௌனி , நாடு குடியரசாக மாறுவது சுதந்திரத்தை நிறைவு செய்வதற்கான இறுதிப் படியாகும். […]

சார்லஸ் மன்னராக பதவியேற்ற பிறகு, தீவு நாடு குடியரசுக்காக வாக்கெடுப்பை நடத்த உள்ளது

ஆன்டிகுவாவும் பார்புடாவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குடியரசாக மாறுவதற்கு வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கேஸ்டான் பிரௌனி தெரிவித்துள்ளார்.

1981 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரமடைந்த தீவு நாடு, இங்கிலாந்து மன்னரைத் தங்கள் அரச தலைவராகப் ஏற்றுக்கொள்ளும் 14 காமன்வெல்த் உறுப்பினர்களில் ஒன்றாகும். இது குறித்து பேசிய பிரௌனி , நாடு குடியரசாக மாறுவது சுதந்திரத்தை நிறைவு செய்வதற்கான இறுதிப் படியாகும். இந்த வாக்கெடுப்பானது காமன்வெல்த் உறுப்பினர் பதவியிலிருந்து தீவு நாட்டை விலக்காது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தீவு நாடு குடியரசாக மாறுவது வாக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டிய ஒ௫ விசயம் என்றும் 3ம் சார்லஸ் அரசராக பதவியேற்ற 3 ஆண்டுகளுக்குள் இது நடைபெறும் என்றும் கூறினார்.


0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu