தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் இன்று முதல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது. இது அனைத்து மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களால் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் தகுதி உள்ளவர்களுக்கு நேற்று முதல் பணம் செலுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து இனி மாதம் தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் ஒன்றாம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாத வண்ணம் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.