டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. மொத்த வாக்கு பதிவு 61% ஆக இருந்த நிலையில், பா.ஜனதா 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று புதிய முதல்-மந்திரியாக ரேகா குப்தா (50) பதவி ஏற்றார்.
பதவியேற்பு விழாவிற்கு முன்பு, ஸ்ரீ மார்கெட் வாலே ஹனுமான் கோவிலில் வழிபாடு செய்த அவர், மாதம் ₹2,500 பெறும் பெண்கள் திட்டத்தை செயல்படுத்த உறுதி அளித்தார். மார்ச் 8ம் தேதிக்குள் முதற்கட்ட உதவித்தொகை பெற்று முடியும் எனவும், பாஜக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் எனவும் தெரிவித்தார்.