மகளிர் ஆசிய கோப்பை : இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இலங்கையில் ஒன்பதாவது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க உள்ள எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். அவ்வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் […]

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இலங்கையில் ஒன்பதாவது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க உள்ள எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். அவ்வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய நேபாளம் அணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். எனவே 20 ஓவர் முடிவில் நேபாளம் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு வெறும் 96 ரன்கள் மட்டுமே அடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu