ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் நேற்று இலங்கையில் தொடங்கியது.
இலங்கையில் ஒன்பதாவது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. அதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக்காட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 அவர்களின் 108 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து 109 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 16.1 ஓவரில் மூன்று விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.