செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதுவரை 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.இதன் கள ஆய்வுகள் கடந்த ஒரு மாதமாக நடந்த நிலையில் அது நிறைவடைந்து விட்டது. இதில் உரிமைத்தொகை பெறுவதற்கு அவரவர்களுக்கு தனித்தனி வங்கி கணக்குகள் இருக்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு தகுதியான பெண்களுக்கு பிரத்தியேகமாக வழங்குவதற்காக ஏடிஎம் கார்டு தயாராகி வருகிறது. இதன் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இந்த ஏடிஎம் கார்டுகள் ரேஷன் கடைகள் மூலமாக கடைகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் திட்டத்தை 15ஆம் தேதி தொடங்கி வைத்ததும் அடுத்த மாதம் முதல் மாதம் தோறும் 1ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு இந்த பணம் வந்துவிடும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அவர்கள் பகுதி ஆர்டிஓவிடம் சென்று முறையிட்டு நிவாரணம் தேடிக் கொள்ளவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.