சீன எல்லையில் ராக்கெட் ஏவும் திட்டத்தில் பெண்கள் படை : ராணுவ தளபதி

January 13, 2023

சீன எல்லை விவகாரம் குறித்து ராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், சீனாவுடனான எல்லை பிரச்னையில் ஏழு முக்கிய அம்சங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. சீன எல்லை பிரச்னை தற்போதைக்கு நிலையாக இருந்தாலும், கணிக்க முடியாத வகையில் உள்ளது. சீன வீரர்கள் எத்தனை பேர் உள்ளனரோ, அதே அளவுக்கு நம் வீரர்களும் உள்ளனர். சீன வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து […]

சீன எல்லை விவகாரம் குறித்து ராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறுகையில், சீனாவுடனான எல்லை பிரச்னையில் ஏழு முக்கிய அம்சங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. சீன எல்லை பிரச்னை தற்போதைக்கு நிலையாக இருந்தாலும், கணிக்க முடியாத வகையில் உள்ளது.

சீன வீரர்கள் எத்தனை பேர் உள்ளனரோ, அதே அளவுக்கு நம் வீரர்களும் உள்ளனர். சீன வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கவனித்து வருகிறோம். எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தாலும் அவற்றை சந்திக்க நம் வீரர்கள் தயாராக உள்ளனர். மேலும் நம் ராணுவத்தில் பீரங்கிகளை கையாளும் பிரிவிலும், ராக்கெட் ஏவும் திட்டத்திலும் பெண்கள் படைப் பிரிவினரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu