பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ஆந்திர அரசு புதிய முயற்சி எடுத்து வருகிறது
ஆந்திரப்பிரதேச அரசு, பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. "வீட்டில் இருந்து வேலை" என்ற இந்த திட்டம், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை முதன்மை அமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது லிங்க்டினில் வெளியிட்டார். பெண்களின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சாதனைகளை பாராட்டி, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். இதன் மூலம், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து பணி செய்யும் வசதிகள், COWORKING SPACE இற்கான ஐ.டி. அலுவலகங்கள் அமைத்து, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.