இலங்கைக்கு ரூ.5,600 கோடி கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்தது. அப்போது இலங்கைக்கு இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்தன. இந்நிலையில் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் (ரூ.5 ஆயிரத்து 600 கோடி) கடன் வழங்க உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.
உலக வங்கி இயக்குனர்கள் வாரிய கூட்டத்தல் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்காகவும், ஏழைகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் இந்த கடன் அளிக்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.