உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிச்சல் மார்ஸ் களமிறங்கினர். இதில் மார்ஸ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 367 எடுத்தது. பாகிஸ்தான் அணி 368 ரன்கள் என்னும் இலக்கை நோக்கி இறங்கியது. ஆனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தது சொற்ப ரன்கள் எடுத்து பவுலியன் திரும்பினார்கள். பின்னர் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை பாகிஸ்தான் இழந்தது. பின்னர் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.