அடுத்த சில வாரங்களில் உலகின் முதல் மரத்தால் ஆன செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. Lignosat என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளை ஜப்பானின் கியோட்டா பல்கலைக்கழகமும் சுமிட்டோ ஃபாரஸ்ட்ரீ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் மேக்னோலியா மரத்தின் பட்டைகளால் செய்யப்பட்டுள்ளது. இது விண்வெளியில் உள்ள அசாதாரண சூழல்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விண்வெளி துறையில் மக்கும் பொருட்கள் உபயோகத்திற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துள்ளது. ஒரு சிறிய காபி கோப்பை அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், பாரம்பரிய ஜப்பானிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்க்ரூ, பசை போன்றவற்றை பயன்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.